BREAKING NEWS

Sunday, February 10, 2013

1,500 Probationary Officers in State Bank branches in the empty invited applications for vacancies.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21-ல் இருந்து 30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பத்தை
www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய பிப்ரவரி 23-ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த பிப்ரவரி 23-ம் தேதி கடைசி நாளாகவும், ஆஃப்லைன் மூலமாக செலுத்த பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 28-ம் தேதி ஆகும். மேலதிக விவரங்களை பெற www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்

நன்றி - புதிய தலைமுறை.

Share this:

Post a Comment

 
Back To Top
Copyright © 2014 USEFULL DOWNLODE. Designed by OddThemes